மாணவி காதலனுடன் தற்கொலை

by Staff / 27-10-2022 10:31:27am
மாணவி காதலனுடன் தற்கொலை

சேலம் மாவட்டம்  நங்கவள்ளி செம்மண்காட்டு வளவு பகுதியைச் சேர்ந்தவர் கோபி (26). இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்தபிளஸ் 2 மாணவி யுவஸ்ரீயும் (17), 2 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன், உறவினர்களுடன் யுவஸ்ரீ வீட்டுக்குச் சென்ற கோபி, அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு யுவஸ்ரீயின் பெற்றோர், மகளுக்கு 18 வயது பூர்த்தியானதும் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளனர். பின்னர், யுவஸ்ரீயை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் நிறுத்தி விட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தென்னந்தோப்பு ஒன்றில் கோபியும், யுவஸ்ரீயும் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கிக்கிடந்தனர். சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள்  சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இரண்டு பேரும் உயிரிழந்தனர்

 

Tags :

Share via