நியூயார்க் கார் விபத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி

by Staff / 28-10-2022 12:05:04pm
நியூயார்க் கார் விபத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மேற்கு மாசசூசெட்ஸில் நடந்த கார் விபத்தில் 3 இந்திய மாணவர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பிரேம்குமார் ரெட்டி கோடா (27), பவானி குல்லப்பள்ளி (22) மற்றும் சாய் நரசிம்ம பட்டம்செட்டி (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் சென்ற கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதியது.

மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக பெர்க்ஷயர் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மசாசூசெட்ஸ் மாநில காவல்துறை மற்றும் உள்ளூர் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த விபத்து அதிகாலை 5.30 மணியளவில் நடந்துள்ளது. அப்போது எதிரே வந்த இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த மற்ற பயணிகளான மனோஜ் ரெட்டி டோண்டா (23), ஸ்ரீதர் ரெட்டி சிந்தகுண்டா (22), விஜய் ரெட்டி கம்மலா (23), ஹிமா ஐஸ்வர்யா சித்திரெட்டி (22) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பெர்க்ஷயர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.காரில் இருந்த 6 பேர் நியூ ஹெவன் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஒருவர் சேக்ரட் ஹார்ட் பல்கலைக்கழக மாணவர் ஆவார். அவர்கள் மீது மோதிய வாகனத்தில் ஓட்டுநர் மட்டுமே இருந்தார்.

 

Tags :

Share via