சனாதனத்தை தொடர்ந்து எதிர்ப்போம் - உதயநிதி

by Staff / 06-11-2023 04:31:22pm
சனாதனத்தை தொடர்ந்து எதிர்ப்போம் - உதயநிதி

எத்தனை ஆண்டுகள் ஆனாலும், சனாதனத்தை தொடர்ந்து எதிர்ப்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய உதயநிதி, சனாதனம் குறித்த தனது கருத்தில் தவறு இல்லை. தனது கருத்தில் பின்வாங்கப் போவதில்லை. சனாதனத்தை பற்றி அம்பேத்கர், பெரியார் , திருமாவளவனைவிட நான் ஒன்றும் பெரிதாக பேசவில்லை. அமைச்சர் பதவி இன்று வரும் நாளை போகும். முதலில் மனிதனாக இருக்க வேண்டும். எனவே இந்த குற்றசாட்டை நான் சட்டரீதியாக சந்திக்கிறேன் என கூறியுள்ளார். முன்னதாக சனாதனம் குறித்த பேச்சுக்கு உதயநிதி மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்திருந்தார்.

 

Tags :

Share via