வீட்டின் முன் நின்ற கார் தீப்பற்றி எரிந்து நாசம்

by Staff / 31-10-2022 04:39:29pm
வீட்டின் முன் நின்ற கார் தீப்பற்றி எரிந்து நாசம்

சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த செட்டிப்புண்ணியம், காந்தி தெருவை சேர்ந்தவர் உமாபதி, 32. லாரிகள் மற்றும் கார் வைத்து உள்ளார்.இவர் காரை, வீட்டின் வெளியே நிறுத்தி விட்டு, துாங்கச் சென்றுள்ளார். நள்ளிரவு 2: 00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, கார் எரிந்த நிலையில் இருந்தது.இது குறித்து, மறைமலை நகர் காவல் நிலையத்தில், உமாபதி கொடுத்த புகாரின் பேரில், கார் தானாக தீப்பற்றியதா அல்லது மர்ம நபர்கள் தீ வைத்தனரா என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via