3 பேர் கொலை.. வீடுகளுக்கு தீ வைப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தின் மொகியுதீன்பூர் கிராமத்தில் பதற்றம் நிலவி வருகிறது. நிலத் தகராறில் தந்தை, மகள் மற்றும் மருமகன் ஆகியோர் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை. இது கிராம மக்களை ஆத்திரமடையச் செய்தது. இதனால் அக்கிராமத்தில் மக்கள் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர கிராமத்தில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.
Tags :