தவறான இடத்தில் வாகனத்தை படம் எடுத்த தகவல் தந்தால் 500 ரூபாய் பரிசு
தவறான இடங்களில் வாகனத்தை பார்க்கிங் செய்தால் அதை புகைப்படம் எடுத்து தகவல் அளிப்பவர் 500 ரூபாய் சன்மானம் வழங்கும் அதிரடி திட்டத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் பார்கிங் தொடர்பாக புதிய சட்டம் வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சூசகமாக தெரிவித்துள்ளார். தவறாக பார்க்கிங் செய்தவரிடம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டால் அதில் 500 ரூபாய் தகவல் அளிப்பவர் தரப்படும் என்று நிதின்கட்காரி சிரிப்பொலி களுக்கு நடுவே கூறினார்.
Tags :