மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

by Editor / 03-11-2022 09:00:38am
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா நேற்று தொடங்கியது. இன்று பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடக்கிறது . சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நேற்று பெரிய கோவில் வளாகத்தில் மங்கல இசை கனிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கத்துடன் சதய விழா தொடங்கியது. இன்று இரண்டாவது நாள் சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று மூன்றாம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை
 

Tags :

Share via