நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்
சென்னை சேலையூரை அடுத்த சந்தோஷபுரம் அருகே சாலையில் சென்றுக்கொண்டிருந்த காரில் இருந்து திடீரென புகை எழுந்துள்ளது. உடனே சுதாரித்துக் கொண்டு காரில் இருந்து அனைவரும் இறங்கிய நிலையில் கார் தீப்பற்றி எரிய தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருமணத்திற்காக தூத்துக்குடி சென்று விட்டு சென்னை திரும்பிய போதும் இந்த அசம்பாவிதம் நடந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இதுக்குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :