குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு-சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை

by Editor / 05-11-2022 08:29:56am
குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு-சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இரவு முதல் இன்று அதிகாலை வரை காண மழை பெய்தது இம்மலையின் காரணமாக மாவட்டத்தினுடைய பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது இதன் தொடர்ச்சியாக அருவி களின் நகரம் என போற்றப்படும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தென்காசி பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கூட்டத் தொடங்கியது இரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது கூட்டம் அருவி வேடிக்கை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் ஐந்தருவி பழைய குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் வேடிக்கை பார்த்து சென்ற வண்ணம் உள்ளனர் இன்னும் சில தினங்களில் சபரிமலை சீசன் தொடங்கப்பட உள்ளதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

 

Tags :

Share via