பாளை சிறைச்சாலை விசாரணை கைதி உயிரிழப்பு

by Editor / 07-11-2022 08:39:50am
பாளை சிறைச்சாலை விசாரணை கைதி உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சார்ந்த ஆதிமூல கிருஷ்ணன் என்ற ஐயப்பன் என்பவர் வீரவநல்லூர் காவல்துறை சம்பந்தமான வழக்கில் ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் 25ம் தேதி பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் இவர் மீது திருச்செந்தூர் காவல் நிலையத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் அவருக்கு வலிப்பு நோய் காரணமாக உடல்நிலை மோசமானதினால் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இது பற்றி பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via