விஜயதசமிக்கு கோவில் திறப்பா?.. முதல்வர்இன்று முக்கிய முடிவு

by Editor / 13-10-2021 10:25:00am
விஜயதசமிக்கு கோவில் திறப்பா?.. முதல்வர்இன்று முக்கிய முடிவு

அமலில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது... அத்துடன், விஜயதசமியன்று கோவில்களை திறப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைகளும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைகளும் தொடர்ந்து குறைந்து வருகின்றன..

இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ளது என்றாலும், கொரோனா பாதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 29 ஆயிரத்து 201 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், அமலில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது..தலைமை செயலகத்தில் இன்று காலை நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக மருத்துவத்துறை நிபுணர்கள், மூத்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், விஜயதசமிக்கு கோவில்களை திறப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via