அரசுப்பள்ளி மாணவர் பலி

by Staff / 07-11-2022 12:33:12pm
அரசுப்பள்ளி மாணவர் பலி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் வெற்றிவேல்(16). இவர் செஞ்சேரிமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். கூலித்தொழிலாளியான குமார், கடந்த வாரம் புதிதாக கட்டிய வீட்டிற்கு குடிபுகுந்தார். அவரது வீட்டிற்கு யுபிஎஸ் மின் இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சிறுவன் வெற்றிவேல் யுபிஎஸ்ஐ ஆன் செய்ய முயன்றுள்ளார். அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வெற்றிவேலை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via