மரநாய் வேட்டையாடி கறி சமைத்த 3 பேர் கைது

by Staff / 10-11-2022 02:09:01pm
மரநாய் வேட்டையாடி கறி சமைத்த 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் சென்னிமலை, அம்மாபாளையம் அரிஜன காலனியில் சிலர், மர நாயை வேட்டையாடி கறி சமைத்து உண்பதாக, வனத்துறையி னருக்கு தகவல் கிடைத்தது. அப்பகு திக்கு சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த மகேசன், 30, முருகேசன், 35, தங் கராசன், 39, ஆகிய, 3 பேரும் இச்சம்ப வத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. , ஈரோடு வனச்சரக அலுவலர் சுரேஷ்  3 பேரையும் கைது செய்தார்.

 

Tags :

Share via