மகள் கர்ப்பம் இளைஞர் தலைமறைவு
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை அடுத்த அடிமாலியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தனது வளர்ப்பு மகள் கர்ப்பமாக இருப்பதை அறிந்த நபர் ஒருவர் தலைமறைவானார்.10-ம் வகுப்பு படிக்கும் மாணவி வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அவர் கர்ப்பமாக இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும், அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த 15 ஆண்டுகளாக சிறுமியின் தாயுடன் வசித்து வருகிறார்.இதற்கிடையில், அந்த நபர் பாலக்காட்டை சேர்ந்தவர் என்று போலீசார் அறிந்தனர். அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Tags :