வாய்க்காலில் கிடந்த பெண் சடலம்- காவல்துறையினர் விசாரணை.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோழமாதேவி வாய்க்காலில், அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக,நவம்பர் 18 ம் தேதி மடத்துக்குளம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.விரைந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து சோழமாதேவி கிராம நிர்வாக அலுவலர் பாக்யராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், மடத்துக்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இறந்து கிடந்த பெண் யார்? என சுற்றுவட்டார பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த கிடந்த பெண்ணை பற்றி விபரம் தெரிந்தவர்கள் மடத்துக்குளம் காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு இன்று அறிவுறுத்தி உள்ளனர்.
Tags :