சீவலப்பேரி அருகே நடந்த கொலை சம்பவத்தில் 9 பேர் கைது. மாவட்ட போலீசார் அதிரடி நடவடிக்கை.
திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட யாதவர் தெருவை சேர்ந்த, சங்கரலிங்கம் என்பவரின் மகன் மாயாண்டி(38) என்பவர் 10 ஆம் தேதி அன்று சீவலப்பேரி - கலீயாவூர் ரோட்டில் கொலை செய்யப்பட்டு இறந்துகிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 5 தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கடந்த 2021-ம் ஆண்டு கோவில் பூசாரியை கொலை செய்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருந்து வரும் நிலையில், இந்த முன்விரோதத்தை மனதில் வைத்து கொண்டு, இறந்து போன மேற்படி மாயாண்டி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, முட்புதரில் மறைந்திருந்த சீவலப்பேரியை சேர்ந்த வலதி(18) உட்பட சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் 14 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் இவ்வழக்கில் எதிரிகளான வலதி என்ற ஆறுமுகம் (18), வல்லநாட்டை சேர்ந்த தம்பான்(18), பல்லிகோட்டையை சேர்ந்த மாடசாமி(24), சுபாஷ்(27), வசவப்பபுரத்தை சேர்ந்த மதன் என்ற மாயாண்டி(18), இசக்கிபாண்டி(19), வல்லநாட்டை சேர்ந்த பிரபா என்ற பிரபாகரன்(19) மற்றும் சீவலப்பேரியை சேர்ந்த முத்துராஜ் மற்றும் கொக்கிகுமார் என்ற வெயிலுகுமார் ஆகிய 9 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :