: பெண் அடித்துக்கொலை

by Staff / 12-11-2022 11:06:38am
: பெண் அடித்துக்கொலை

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள பில்லுர் பெரியவீட்டுக்காரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி வசந்தா (39). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மனைவி சரோஜாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று கலை வசந்தா கிராமத்தில் உள்ள வயலுக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த கணவர் முத்துசாமி வயலுக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள கிணற்றில் தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முத்துசாமி, தோகைமலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .பின்னர் போலீசார் சந்தேகத்தின் பேரில் சரோஜாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், வசந்தா வயலில் இருந்தபோது அங்கு சென்ற சரோஜாவுடன் அவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரோஜா, தான் வைத்திருந்த களைக்கொத்தியால் வசந்தாவை தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த வசந்தாவை, அவர் கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.

 

Tags :

Share via