பணத்தை மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம்..

by Staff / 12-11-2022 05:33:27pm
பணத்தை மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம்..

சைபர் கிரைம் கோவை மாநகர போலீசார் ஆன்லைன் மூலமாக இழந்த பணத்தை மீண்டும் மீட்டுக் கொடுத்தனர்.Online மோசடியில் இழந்த பணம் Rs. 1, 90, 000 மீட்டு தந்தது தொடர்பாக
கடந்த 17. 10. 2022 -ம் தேதி கோயம்புத்தூர் B. K. புதூரைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரின் மகன் ஸ்ரீலஜ்குமார் என்பவரின் தொலைபேசி எண்ணிற்கு PAN Card Update with Saving Bank Account என்று வந்த குறுஞ்செய்தியை நம்பி அதிலிருந்த linkயை கிளிக் செய்துஅதில் தன்னுடைய SBI வங்கி கணக்கின் விவரங்களை பதிவு செய்த உடன் தனது வங்கி கணக்கில் இருந்து Rs. 2, 14, 997. 98/- பணம் திருடப்பட்டது அறிந்து நடவடிக்கை எடுக்க அளித்த புகார்.இது தொடர்பாக,கோவை மாநகர காவல் ஆணையர். V. பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில்
கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் எடுத்த உடனடி நடவடிக்கையில் இழந்த பணத்தில் ரூபாய் 1, 90, 000 மீட்கபட்டு மனுதாரரின் கணக்கில் சேர்க்கப்பட்டது என்பது இதன்மூலம் தெரிவிக்கப்பட்டது. 

 

Tags :

Share via