கள்ளக்குறிச்சி மாணவி மரணம்- திடீர் திருப்பம்

by Staff / 14-11-2022 05:13:54pm
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்- திடீர் திருப்பம்

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் மாணவி உயிரிழந்த வழக்கில், மாணவியின் செல்போனை பெற்றோர் ஒப்படைக்கவில்லை என காவல்துறையின் விசாரணை நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த மாணவியின் பெற்றோர்,தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் செல்போனை ஒப்படைத்தால்தான் விசாரணை நடத்த முடியுமா என கேள்வி எழுப்பினர். இதற்கு நீதிபதிகல் நியாயமான விசாரணை நடைபெற வேண்டுமென்றால் செல்போனை ஒப்படையுங்கள் என தெரிவித்தனர். மேலும் செல்போன் ஒப்படிக்கப்பட்ட பின்னர் அதனை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செயவும் சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 

Tags :

Share via