சீர்காழி தரங்கம்பாடி வட்டாரங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

by Editor / 15-11-2022 07:14:57am
 சீர்காழி தரங்கம்பாடி வட்டாரங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் அப்பகுதிகளில் வெள்ள நீர் வடியாத நிலையில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via