கோவையில் போதை மாத்திரை விற்பனை செய்ய முயன்ற கும்பல் கைது-மாநகர காவல்துறை அதிரடி.

by Newsdesk / 25-06-2021 08:26:42am
கோவையில் போதை மாத்திரை விற்பனை செய்ய முயன்ற கும்பல் கைது-மாநகர காவல்துறை அதிரடி.

 


தமிழகத்தில் போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை காவல்துறையினர் தீவீரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.மேலும் போதை கும்பல்கள் மாணவர்சமுதாயத்தை மையமாக வைத்து போதை பொருட்களை விற்பனை செய்வதாக கோவை மாநகர காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தைத்தொடர்ந்து காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவீரப்படுத்தியத்தைத்தொடர்ந்து
கோவையில் போதை தரும் மாத்திரைகளை விற்பனை செய்த 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த  650 போதை  மாத்திரைகள்  பறிமுதல் செய்யப்பட்டன.மேலும்  இந்த மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தி போதை ஏற்படுத்தி இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை  முதல்கட்டமாக மாநகர காவல்துறையால் தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via