மனைவி இறந்ததால் பெண் மருத்துவரை தாக்கிய கணவர்
திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவில் பெண் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் கட்டி இருப்பதாக அறிவித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அறுவை சிகிச்சைக்கு முன்பு இது பற்றி பெண்ணின் கணவர் கொல்லத்தைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரிடம் எழுதி வாங்கியிருந்த நிலையில், பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறவினர்களிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு ஆத்திரமடைந்த செந்தில் குமார் , திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த ரெசிடென்ட் டாக்டரை வயிற்றில் எட்டி உதைத்துள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட டாக்டர் உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். போலீசார் அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது சக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உறுதியளித்துள்ளார்.
Tags :