தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டுகளுடன் 2 பேர் கைது 

by Editor / 24-07-2021 04:05:19pm
தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டுகளுடன் 2 பேர் கைது 

 

தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
தூத்துக்குடி தாளமுத்துநகா் பகுதியில் ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார்  அந்த வீட்டில் திடீரென சோதனை மேற்கொண்டனா். சோதனையின்போது, அங்கு ஒரு நாட்டு வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அந்த வீட்டில் இருந்த கொம்பையா மகன் முருகன் என்கிற யமஹா முருகன் (38), ஜான்சன் மகன் பெலிக்ஸ் (21)ஆகிய இருவரையும் கைது செய்து தாளமுத்து நகர் போலீசார் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
 

 

Tags :

Share via