நீ என்ன பெண்ணா எனக்கேட்டு பயணியை தாக்கிய பரிசோதகர்.

by Editor / 01-12-2022 10:31:35pm
  நீ என்ன பெண்ணா எனக்கேட்டு பயணியை தாக்கிய  பரிசோதகர்.

கோவையை சேர்ந்த சுதேஷ் என்பவர் தன் ஊருக்கு திரும்புவதற்காக சென்னையில் இருந்து ரயிலில் வந்துள்ளார். அப்போது அவரிடம் டிக்கெட் பரிசோதனை செய்பவர்கள் டிக்கெட்டை கேட்டுள்ளனர். அவர் தன்னிடம் இருக்கும் முன்பதிவு செய்த டிக்கெட்டை காட்டிய நிலையில், அதில் பெண்ணின் பெயர் இருந்துள்ளது. உடனே டிக்கெட் பரிசோதகர்கள் அவரிடம் ‘நீ என்ன பெண்ணா?’ என கேட்டுள்ளனர்.அவர் தன்னுடைய அண்ணிதான் டிக்கெட் புக் செய்ததாகவும், அப்போது தவறுதலாக அவருடைய பெயரை கொடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, டிக்கெட் பரிசோதகர்கள் சுதேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

Tags :

Share via