தென்காசி ஜே. பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் ஆங்கில துறையின் நாடக கலைவிழா

by Editor / 25-11-2022 11:03:09pm
தென்காசி ஜே. பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் ஆங்கில துறையின் நாடக கலைவிழா

தென்காசி அருகிலுள்ள ஆய்க்குடி பகுதியில் அமைந்துள்ள ஜே.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் ஆங்கில துறையின் நாடக கலைவிழா வெள்ளி கிழமை நடைபெற்றது. முதலாம் ஆண்டு மாணவர்கள் 5 குழுக்களாகப் பசுமையை காப்போம், பெண்களின் பாதுகாப்பு, வெனிஸ் நகர வணிகன், ஒற்றுமை, அழகான நட்பு என்ற தலைப்புகளில் ஆங்கில மொழியில் நடித்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். கல்லூரி நிர்வாகி அருட்சகோதரி ஹேம்லட், கல்லூரி முதல்வர் முனைவர் மைக்கேல் மரியதாஸ் ஆங்கிலதுறைத்தலைவர் குரூஸ் திவாகரன் முன்னிலையில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் சுழற் கோப்பை வழங்கப்பட்டது. பச்சை மற்றும் ஆரஞ்சு அணி முதல் பரிசையும், வெள்ளை மற்றும் சிகப்பு அணி இரண்டாம் பரிசையும் பெற்றனர்.இந்த நிகழ்ச்சியை  பேராசிரியர் மகேஷ் மற்றும் துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

தென்காசி ஜே. பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் ஆங்கில துறையின் நாடக கலைவிழா
 

Tags : ஜே.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி

Share via