அதிகாரி மிரட்டலால் அதிர்ச்சியடைந்த அங்கன்வாடி அமைப்பாளர் தீக்குளிப்பு.
திருச்சி - மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ள எல மணம் அங்கன்வாடி மையத்திற்கு ஆய்வுக்கு சென்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அங்கு பணியில் இருந்த அங்கன்வாடி அமைப்பாளர் கண்ணகி என்பவரை தரக்குறைவாக பேசி அவரை சஸ்பெண்ட் செய்து விடுவேன் என எச்சரித்துள்ளார்.அதிகாரியின் மிரட்டலால் அச்சமடைந்த அங்கன்வாடி அமைப்பாளர் கண்ணகி அங்கன்வாடி முன்பு தீக்குளித்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் பணியாளர்கள் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் கண்ணகி காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :