இலங்கைக்கு மஞ்சள் கடத்த முயற்சி

by Staff / 29-11-2022 11:41:45am
இலங்கைக்கு மஞ்சள் கடத்த முயற்சி

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு மஞ்சள் கடத்துவதாக காவல்துறையினருக்கு இன்று தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், இலங்கைக்கு கடத்த முயன்ற 1,500 கிலோ சமையல் மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். சம்பந்தபட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
 

 

Tags :

Share via