மதுரையில் 28 ஆட்டோக்கள் பறிமுதல்

by Staff / 29-11-2022 02:19:52pm
மதுரையில் 28 ஆட்டோக்கள் பறிமுதல்

மதுரையில் வட்டாரப் போக்குவரத்துத் துறை மற்றும் மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை சார்பில் ஆட்டோக்கள் மீது சிறப்பு வாகனத் தணிக்கை நேற்று மாலை நடத்தப்பட்டது.மதுரை சரக இணைப் போக்குவரத்து ஆணையர் பொன். செந்தில்நாதன் மற்றும் போக்கு வரத்துக் காவல் கூடுதல் துணை ஆணையர் திருமலைக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மதுரை மைய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சித்ரா மற்றும் போக்கு வரத்துக் காவல் உதவி ஆணையர்கள் செல்வின், மாரியப்பன், போக்குவரத்து ஆய்வாளர்கள் உலகநாதன், முரளி, சக்திவேல், அனிதா, செல்வம், ஜாஸ்மின் கமலா மற்றும் போக்குவரத்து காவல் ஆய் வாளர்கள் நந்தகுமார், சுரேஷ், பஞ் சவர்ணம் ஆகியோர் இணைந்து மாட்டுத்தாவணி பூ மார்க்கெட், கோரிப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்டப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்..இந்த ஆய்வின் போது 28 ஆட்டோக்கள் வாகனப் பதிவு புதுப்பிக்கப்படாதது மற் றும் ஓட்டுநர்கள் மது அருந்தியது உள்ளிட்ட காரணங்களுக்காகபறிமுதல் செய்யப்பட்டது.மேலும் 53 ஆட்டோக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via