சமமாகவும், மரியாதையுடனும் நடத்தப்படுவது அவசியம்

by Staff / 01-12-2022 01:48:21pm
சமமாகவும், மரியாதையுடனும் நடத்தப்படுவது அவசியம்

எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சமமாகவும், மரியாதையுடனும் நடத்தப்படுவது அவசியம் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.இன்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, இது பற்றி ட்வீட் செய்துள்ள எம்.பி. கனிமொழி, உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் இன்று. எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோய்த் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, நோய்த் தடுப்பு செயல்பாடுகளை முன்னெடுப்பதோடு, எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சமமாகவும், மரியாதையுடனும் நடத்தப்படுவது அவசியம். எந்தவித புறக்கணிப்பும், ஒதுக்குதலுமின்றி அவர்களுக்கான உரிமைகள் கிடைத்திட வழிசெய்வோம். எய்ட்ஸ் இல்லாத சமூகம் அமைத்திடுவோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

Tags :

Share via