வேதனையான வேண்டுதல்..சிலைக்கிடையே சிக்கிக்கொண்ட பக்தர்

by Editor / 05-12-2022 11:41:54pm
வேதனையான வேண்டுதல்..சிலைக்கிடையே சிக்கிக்கொண்ட பக்தர்

அவரவருக்கு பிடித்தமான ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் செல்லும் ஆலயங்களில் ஒவ்வொரு வேண்டுதல்களை வேண்டுவதும் அந்த வேண்டுதல்கள் நிறைவேறியபின்னர் அதற்குரிய பரிகாரத்தை செய்வது வழக்கமாக இருந்துவருகிறது. ஒரு சிலர் கடவுளுக்கு படைப்பதற்கு பொருட்கள் வாங்கி செல்வர். சிலர் அங்கிருக்கும் கடவுள் சிலைகளின் காதில் தங்கள் குறைகளை சொல்லுவர். ஆனால் ஒரு நபர் வேண்டுதல் என்ற பெயரில் யானை சிலைக்கு அடியில் புகுந்து மாட்டிக்கொண்ட சம்பவம் வடமாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அவர் மாட்டிக்கொண்டதையடுத்து பலரும் முயற்சி செய்து அவரை மீட்க முயற்சி எடுக்க நினைத்து, எதுவும் நடக்கவில்லை. நீண்டநேரமாக அவர் தனது உடலை சிலைக்கிடையே சிக்கிக்கொண்டதிலிருந்து மீள சிக்கி திணறிய காட்சிகளை எடுத்த நபர் அதனை இணையத்தில் பரவவிடவே தர்போது இணையத்தில் அந்தக்கட்சிகள் வைரலாகிவருகிறது.இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என தெரியவில்லை. 

 

Tags :

Share via