துண்டிக்கப்பட்ட தலையுடன் செல்ஃபி எடுத்த பயங்கரம்

by Staff / 06-12-2022 12:49:59pm
துண்டிக்கப்பட்ட தலையுடன் செல்ஃபி எடுத்த பயங்கரம்

ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் சமீபத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கில் முர்ஹா பகுதியை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இம்மாதம் 1ஆம் தேதி தசாய் முண்டா என்பவரது குடும்பத்தினர் விவசாய வேலைக்கு சென்றுள்ளனர்.இவர்களது மகன் கனு முண்டா வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலையில் குடும்பத்தினர் வீடு திரும்பியபோது மகனைக் காணவில்லை. தசாயின் மருமகன் சாகர் முண்டா, கனுவை தனது நண்பர்களுடன் வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்று கொன்றார். மேலும், இளைஞரின் துண்டிக்கப்பட்ட தலையுடன் செல்பி எடுத்துக்கொண்டுள்ளார். இது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via