பரக்கலக்கோட்டை கோயிலில் ரூ 25 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்

by Staff / 07-12-2022 01:35:21pm
பரக்கலக்கோட்டை கோயிலில் ரூ 25 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்

தஞ்சை மாவட்டத்தில் பரக்கலக்கோட்டை மத்தியபுரீஸ்வரர் பொது ஆவுடையார் கோயில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை சோமவாரத் திருவிழா நடைபெறும். நடப்பாண்டிற்கான கார்த்திகை மூன்றாவது சோமவாரத் திருவிழா நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை தஞ்சை இணை ஆணையர் சூரியநாராயணன் உத்தரவின் பேரில் உதவியாளர் நாகையா தலைமையில் கோயில் உண்டியலில் உள்ள காணிக்கைகள் எண்ணப்பட்டது.இதில் மொத்தம் ரூபாய் 25 லட்சத்து 93 ஆயிரத்து 892 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். உண்டியல் எண்ணும் பணியின் போது செயல் அலுவலர் வடிவேல் துரை, பரம்பரை அறங்காவலர்கள் ராதா, முரளிதரன், இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர்கள் சித்ரா, அமுதா ஆகியோர் உடன் இருந்தனர். கோவில் பணியாளர்கள், தாமரங்கோட்டை குமரன் கல்வியியல் கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் தன்னார்வலாக கலந்து கொண்டு காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via