காவல் நிலையம் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்
பஞ்சாப் மாநிலம் தர்ன் தரனில் காவல் நிலையம் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் பஞ்சாபின் டர்ன் தரனில் உள்ள காவல் நிலையம் மீது ராக்கெட் லாஞ்சர் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டு வீசப்பட்டது. காவல் நிலையத்தின் வெளிப்புறத் தூணில் மோதிய பிறகு ராக்கெட் லாஞ்சர் குண்டு மீண்டு வந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவான ஐஎஸ்ஐயின் அனுசரணையில் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Tags :