பிரதமர் மீது வெடிகுண்டு வீச்சு
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அந்நாட்டின் வகாயாமா நகரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கேயிருந்த நபர் ஒருவர், அவர் மீது புகை வெடிகுண்டை வீசினார். இதனால், பிரதமர் பூமியோ பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது தடுமாறி கீழே விழுந்த பிரதமர் கிஷிடாவை, பாதுகாப்புப் படையினர் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். பிரதமர் மீது வெடிகுண்டை வீசிய நபரை போலீசார் கைது செய்தனர். கடந்தாண்டு ஜூலை மாதம் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, பொதுக்கூட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
Tags :