வெறி நாய் கடித்து சிறுமி பெண்கள் உள்ளிட்ட 11 பேர் படுகாயம்

by Staff / 26-03-2023 04:49:56pm
வெறி நாய் கடித்து சிறுமி பெண்கள் உள்ளிட்ட 11 பேர் படுகாயம்

தூத்துக்குடி அருகே கீழவைப்பார் பகுதியில் வெறி நாய் கடித்து சிறுமி பெண்கள் உள்ளிட்ட 11 பேர் படுகாயம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுகாயத்துடன் சிகிச்சைக்காக அனுமதி: வெறிநாயை பஞ்சாயத்து நிர்வாகம் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கைதூத்துக்குடி அருகே உள்ள கீழ வைப்பார் பகுதியில் இன்று காலை முதல் வீட்டிலிருந்தவர்கள் மற்றும் தேவாலயத்துக்கு சென்றவர்கள் என ஒருவரையும் விடாமல் கிராமத்திலிருந்து வெறிநாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்துள்ளது.மேலும் நாய் கடித்தவர்களின் கழுத்து, இடுப்பு, கால், கை, உள்ளிட்ட இடங்களில் பயங்கரமாக கடித்துள்ளது. இதன் காரணமாக 10 வயது சிறுமி ஜெரிஸ்மா, மேலும் ஜெஸ்மிதா, திபான்சியா, சூசை அம்மாள், பிருந்தா, சிலுவையம்மாள் உள்ளிட்ட 11பேர் படுகாயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.கிராமத்தில் சிறுமி பெண்களை விரட்டி கடிக்கும்வெறி நாயை பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக தேடி பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிழவைப்பார் கிராமத்தில் வெறிநாய் கடித்து 11 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பொதுமக்களிடையே அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ‌

 

Tags :

Share via