குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

by Staff / 19-01-2024 12:21:03pm
குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவு: அமைச்சர்  மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 2020-ம் ஆண்டு கணக்கின்படி, குழந்தைகள் இறப்பு விகிதம், ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளுக்கு 13 குழந்தைகள் என்ற அடிப்படை யில் இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் திமுக அரசு செயல்படுத்திய குழந்தை நல திட்டங்களினால், கடந்த 2 ஆண்டுகளில் குழந்தைகள்இறப்பு விகிதம் படிப்படியாக குறையத் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் தற்போது, சுகாதார மேலாண்மை தகவல் அமைப்புவெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் ஆயிரம் குழந்தைகளுக்கு, 8. 2 என குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது.

 

Tags :

Share via