சந்தேகத்தால் இளைஞர் குத்திக்கொலை

by Staff / 11-12-2022 01:24:23pm
சந்தேகத்தால் இளைஞர் குத்திக்கொலை

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி அக்‌ஷயாவை அவரது உறவினர் ராஜூ கடந்த வாரம் பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். வீட்டை அடைந்ததும், அவர்கள் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அக்‌ஷயா பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்த ராஜூ மீண்டும் உடல் நலக்குறைப்பாடு காரணமாக மருத்துவமனைக்கு செல்லும் போது அக்‌ஷயாவின் தந்தை அவரை கத்தியால் குத்தியதில் ராஜூ சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் அக்‌ஷயாவின் தந்தையிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via