தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்த பிரேமலதா விஜயகாந்த்

by Staff / 06-11-2022 03:52:34pm
தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்த  பிரேமலதா விஜயகாந்த்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் பகுதியில் தேமுதிக கட்சி கொடியை ஏற்றி வைத்து 
 செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் வடகிழக்கு பருவமழை காரணமாக மழைநீர் தேங்கிய பகுதிகளில் எதிர்க்கட்சியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக ராட்சச எந்திரங்கள் மூலம் மழை நீரை வெளியேற்றி இருக்கிறார்கள் இது உண்மையிலேயே பாராட்டுக்கூடிய விஷயம் இதை ஒட்டுமொத்த மக்களே பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் அரசு நல்லது செய்தால் முதலில் வரவேற்பது தேமுதிகவாகத்தான் இருக்கும் என தெரிவித்தார் இந்த மழைக்காலத்தில் அவர்கள் நல்ல முறையில் செயல்பட்டு இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.தமிழக அரசு பால்விலைய உயர்த்தி உள்ளது. மக்கள் பிரச்சினை கவனத்தில் கொண்டு பால் விலை உயர்த்தாமல் மலிவு விலையில் பால் வழங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தமிழக அரசுக்கு வேண்டுகோள்.

 

Tags :

Share via