பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

by Staff / 12-12-2022 02:32:11pm
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டின் அநேக இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.கன மழை காரணமாக காஞ்சிபுரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (12.12.22) அரை நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார். அதே போல், சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று (12.12.22) அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (12.12.2022) பிற்பகல் 3 மணிக்கு மேல் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், தமிழ்நாட்டின் அநேக இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,
அடுத்த 5 நாட்களுக்கு வானிலையில் முக்கிய நிகழ்வுகள் எதுவும் இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு உள் கர்நாடகம் மற்றும் வடக்கு கேரளா ஆகிய பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து 5.8 கிலோ மீட்டர் உயரம் வரை வளிமண்டல சுழற்சி நீட்டித்து வருகிறது. இது தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் வடக்கு கேரளா மற்றும் கர்நாடகா கடற்கரையில் உருவாக வாய்ப்புள்ளது.

இதனால், டிசம்பர் 13ஆம் தேதி அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அதன்பின் இந்திய கடற்கரையிலிருந்து மேற்கு - வடமேற்கு நோக்கி நகரக்கூடும். இதனால் இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via