போதைப்பொருள் வாங்க 10ரூ கொடுக்காத நண்பன் கொலை
மேற்கு வங்கத்தில் 20 வயது இளைஞன் ஒருவன் வெறும் 10 ரூபாய்க்காக தன் நண்பனை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து போலீஸ் நடத்திய விசாரணையில், குற்றவாளி போதை பொருளுக்கு அடிமையாகி இருந்ததாகவும், அருகே இருந்த காட்டிற்கு சென்று போதை பொருட்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. ஒருநாள் போதை பொருள் வாங்குவதற்கு தன் நண்பனிடம் 10 ரூபாயை குற்றவாளி கேட்டிருக்கிறான். அவன் தன்னிடம் இல்லை என மறுக்கவே கற்களால் அடித்து அவனை கொலை செய்துள்ளான். இதையடுத்து போலீசார் அவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags :