மான் இறைச்சியுடன் 2 பேர் கைது

by Staff / 18-12-2022 01:30:22pm
மான் இறைச்சியுடன் 2 பேர் கைது

கொடைக்கானல் அருகே உள்ள மேல்மலை கிராமமான குண்டுப்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவர், சமைத்து சாப்பிடுவதற்காக தனது வீட்டில் மான் இறைச்சியை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரது வீட்டில் வனத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் மான் இறைச்சி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்த 2½ கிலோ மான் இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரனின் கூட்டாளி முத்து என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், குண்டுப்பட்டி அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில் செந்நாய்களால் வேட்டையாடப்பட்ட கடமானில் இருந்து, இறைச்சியை எடுத்து சமைத்து சாப்பிட கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே கடமான் வேட்டையாடப்பட்டதா? அல்லது மானை செந்நாய்கள் வேட்டையாடிய‌தா? என்ற கோணத்தில் வனத்துறையிர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via