பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி இன்று முதல்

by Editor / 19-12-2022 08:45:10am
பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி இன்று முதல்

தமிழகத்தில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி 30 நாட்கள் பள்ளி வராத குழந்தைகளையும், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகளையும் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடங்குகிறது. இதற்காக ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த குழு வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி, பள்ளி குழந்தைகளை கண்டறிந்து, அவர்கள் பெற்றோரிடம் பேசி பள்ளியிலோ, சிறப்பு வகுப்பிலோ சேர்க்க நடவடிக்கை எடுப்பார்கள்.

 

Tags :

Share via