நெல்லை அருகே விபத்து தாய், குழந்தை பரிதாப சாவு
நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானை அடுத்த அலங்காரபேரியை சேர்ந்தவர் எம்பெருமாள் (வயது 30). இவர் தனது மனைவி முத்துசெல்வி (25), தன் 2 குழந்தைகள் அனுஸ்ரீ (6) அஸ்வந்த் (1) ஆகியோரை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு நெல்லைக்கு வந்தார்.
பின்னர் இரவு மீண்டும் அலங்காரப்பேரிக்கு திரும்பும் போது கங்கை கொண்டான் திருப்பத்தில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோதியதில் நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.
காயம்பட்டவர்களை அப்பகுதியினர் அரசு மருத்துமனைக்கு அழைத்துச் செல்லும் போது எம்பெருமானின் மனைவி முத்துச்செல்வி, மகள் அனுஸ்ரீ இருவரும் இறந்து விட்டனர். எம்பெருமாள், மகன் அஸ்வந்த் (1) இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
--
தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய வாலிபர் பலி
பாளையங்கோட்டையை சேர்ந்தவர் முத்துக்குமார் புதுப்பேட்டை வடக்கு தெருவில் வசித்து வருகின்றார். இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 27) நண்பர்கள் இருவருடன் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சின்னசங்கரன்கோவிலில் தாமிரபரணியின் தடுப்பணை பகுதியில் நீராடி மகிழ்ந்தார்.
ராஜ்குமார் நீரில் மூழ்கினார் அவரை நண்பர்கள் மீட்க முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை இது குறித்து அம்பை தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பால சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் நீண்ட நேரம் போராடி ராஜ்குமார் உடலை மீட்டனர்
--
Tags :