ஆற்றில் முதியவர் பிணம்
அரவக்குறிச்சி அருகே உள்ள நாகம்பள்ளியைச் சேர்ந்த ஆறுமுகம் வயது 70, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது மாயமானதாக உறவினர்கள் தேடி வந்த நிலையில், நாகம்பள்ளி கிராமம் அருகே உள்ள அமராவதி ஆற்றின் கரையில் ஆறுமுகத்தின் வேட்டி, செருப்பு போன்றவை இருப்பதைக் கண்டு அப்பகுதியில் உள்ள மக்கள் அரவக்குறிச்சி போலீசாருக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர்.இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் அமராவதி ஆற்றில் தேடினர். அப்போது ஆறுமுகம் அமராவதி ஆற்றங்கரை பகுதியில் பிணமாக மீட்டனர்.உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அரவக்குறிச்சி போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
Tags :