ரயில் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே ரயில் மோதியதில் முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கண்டமங்கலம் பகுதியில் ரயில் பாதையைக் கடக்க முயன்ற 65 வயது முதியவா் திருப்பதி நோக்கிச் சென்ற விரைவு ரயில் மோதியதில் உயிரிழந்தாா். இறந்தவா் யாா் என்ற விவரம் தெரியவில்லை. விடுதியில் சடலம்: விழுப்புரம் நகரிலுள்ள தனியாா் தங்கும் விடுதியில் ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. கடந்த 5 நாள்களாக விடுதியில் தங்கியிருந்த இவரது அறை வெள்ளிக்கிழமை வெகு நேரமாகியும் திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள் நகரக் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதன் பேரில் போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தாா். அவரது ஆதாா் அட்டையில் சேலம், அரியலூா் ஒரத்துபாலக்காடு சுப்ரமணி மகன் லோகநாதன் (38) என இருந்தது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை இது குறித்து கண்டமங்கலம், விழுப்புரம் நகரக் காவல் நிலையத்தினா் தனித்தனியே வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்
Tags :