கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

by Editor / 25-12-2022 07:36:00am
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தமிழகத்திலுள்ள அனைத்துத் தேவாலயங்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. தேவாலய வளாகத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் வகையில் தத்ரூபமாக குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இப்பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் அவர்களது வீடுகள், கடைகள் மற்றும் நிறுவனங்கள் முன்பு பல வண்ணங்களில் ஸ்டார்கள் தொங்கவிட்டு இருந்தனர். மின் விளக்குகளால் மரங்கள், வீட்டையும் அலங்கரித்து வைத்திருந்தனர். சிறப்பு பிரார்த்தனை  தேவாலயத்தில் நேற்று நள்ளிரவு கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதில் நள்ளிரவு 12 மணியளவில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதில் திரளான கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து தங்கள் குடும்பத்துடன் அதிகாலை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுப்பட்டனர்.
 

 

Tags :

Share via