கார் விபத்து சிறுமிபலி

by Staff / 26-12-2022 01:56:44pm
கார் விபத்து சிறுமிபலி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி செட்டி தெருவை சேர்ந்த ஏழு பேர் கொண்ட குடும்பத்தினர் திருச்செந்தூர் செல்வதற்காக ஒரு காரில் நேற்று இரவில் கிளம்பி வந்து கொண்டிருந்தனர் காரை சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பாரதி நகர் சேர்ந்த சுப்பையா மகன் பாண்டி வயது 53 என்பவர் ஓட்டி வந்தார்.இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே துரைசாமிபுரம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது இதில் காரில் இருந்த மணி மகள் கயல்விழி வயது 14 என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.மேலும் காயமடைந்த பிரபா எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தகவல் அறிந்தவுடன் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via