திமுக கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை

by Staff / 02-01-2023 01:14:51pm
திமுக கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை

பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி விருகம்பாக்கத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணைப்பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியான் மற்றும் பிரபாகர் ராஜா எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு திமுக நிர்வாகிகள் ஏகாம்பரம் மற்றும் பிரபு ஆகிய இருவரும்  பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட காவலர் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து திமுக நிர்வாகிகளை கைது செய்ய போலீசார் சென்ற போது விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா தடுத்து நிறுத்தியதாகவும், திமுக நிர்வாகிகளை கைது செய்யக்கூடாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் காவல்துறையினர் மட்டுமில்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via