ரத்தன் டாடா குடும்பத்தில் மரணம்
ரத்தன் டாடாவுக்கு நெருக்கமானவரும், டாடா குழுமத்தில் பல உயர் பதவிகளை வகித்தவருமான ஆர்.கிருஷ்ணகுமார் (84) காலமானார். மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார். பத்மஸ்ரீ விருது பெற்ற கிருஷ்ண குமார் கேரளாவின் தலச்சேரியில் பிறந்து வளர்ந்தவர். டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக மட்டுமல்லாமல், குழுமத்தில் உள்ள பல நிறுவனங்களின் உயர் பதவியில் பணியாற்றியவர். அறக்கட்டளைகளின் பொறுப்புகளையும் கவனித்து வந்தார்.
Tags :