விமான பயணி மீது சிறுநீர் கழித்த பயங்கரம்
ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் வணிக வகுப்பில் பயணித்த பெண் மீது குடிபோதையில் ஆண் ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். இச்சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி நடந்தது, தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேபின் குழுவினரிடம் கூறியதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் டாடா தலைவர் சந்திரசேகரனுக்கு கடிதம் எழுதினார்.அதன் பிறகு விசாரணை தொடங்கியது. மதிய உணவுக்குப் பிறகு தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். மறுபுறம், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
Tags :